Load Image
Advertisement

மாணவர்களை இறக்கிவிட்டால்.. கண்டக்டர்கள் மீது நடவடிக்கை

அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பல லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்க்கு பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதுவரையில் பள்ளிச்சீருடையில் வந்தாலோ, அல்லது பழைய பஸ் பாசை காட்டினாலோ, அல்லது அடையாள அட்டை வைத்திருந்தாலோ பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என கண்டக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பல பஸ்களில் மாணவர்களை இறக்கி விடுவதாக, கண்டக்டர்கள் மீது தொடர்ச்சியாக புகார் வந்தன. இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களை பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement