Load Image
Advertisement

பொள்ளாச்சி போல ஆந்திராவில் கொடூரம்

ஆந்திராவில் உள்ள சத்யசாய் மாவட்டம், கோரண்ட்லா பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வினி. திருப்பதியில் ஹாஸ்டலில் தங்கியிருந்து, பி பார்ம் B Pharm மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். திடீரென மாயமான தேஜஸ்வினி, அவரது சொந்த ஊர் அருகே மல்லாபள்ளி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த பண்ணை வீடு சாதிக் என்ற இளைஞரின் குடும்பத்திற்கு சொந்தமானது. தேஜஸ்வினியை சாதிக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்தான், தேஜஸ்வினியை ஏமாற்றி அழைத்து சென்று, நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து, தேஜஸ்வினி சடலத்துடன் கோரண்ட்லா காவல் நிலையம் முன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறி அவர்களை போலீசார் கலைந்துபோக செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement