Load Image
Advertisement

ஸ்டாலின் தகவல்

நீட் விலக்கு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பியது. ஜனாதிபதிக்கு அனுப்பாமல் மீண்டும் தமிழக அரசுக்கே கவர்னர் ரவி அனுப்பினார். இதனால் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முறை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கவர்னரை கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் ஜனாதிபதிக்கு மசோதா சென்றுவிட்டதாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். அரசு எடுத்த தொடர் நடவடிக்கையின் பயனாக நீட் மசோதாவை ஜனாதிபதி பார்வைக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். அடுத்த கட்டமாக, மத்திய அரசை வலியுறுத்தி ஜனாதிபதி ஒப்புதலை பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறினார்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement