கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் மற்றும் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், எனது கலை உலக அண்ணன் கமல்ஹாசன். பாலசந்தர் கமலுக்கு மட்டுமல்ல என்னை போன்ற பலருக்கும் பிதமாகன், குரு.
கமலுக்கு அரசியலுக்கு வந்தாலும் தாய்வீடான சினிமாவை விட மாட்டார். கலையை உயிராக கொண்டிருப்பவர். நான் அதிகமுறை பார்த்த படங்கள் ‛காட்பாதர், திருவிளையாடல் ஹேராம்'. அதிலும் ஹே ராம் படத்தை 30 - 40 முறை பார்த்துள்ளேன்.
பாலசந்தரின் சிலையை திறந்து வைத்தபோது அவருடன் பழகிய நாட்கள் வந்து சென்றன. தமிழ் மட்டும் கற்றுக்கொள், உன்னை எங்க கொண்டு போய் உட்கார வைக்கிறேன் பார் என பாலசந்தர் சொன்னது, தமிழ்நாட்டு மக்களை அப்படி சொல்வதாக எண்ணினேன். கமலின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்து கொண்டே இருப்பார். கமலுக்கு மற்றுமொரு தகப்பன் அவர் என்றார்.