Load Image
Advertisement

துலாம் : ராகு, கேது பெயர்ச்சி பலன் .. செலவு அதிகரிக்கும்

சித்திரை 3,4-ம் பாதம்: செலவு அதிகரிக்கும்

இந்த ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலனை தரும் என்றாலும், மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும். ராகு இதுவரை 8ம் இடமான ரிஷப ராசியில் இருந்து முயற்சியில் தடையையும், குடும்பத்தில் பிரிவையும் ஏற்படுத்தி இருப்பார். உறவினர் வகையிலும் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டிருக்கும். சிலர் ஊர் விட்டுஊர் செல்லும் நிலையும் உருவாகி இருக்கும். இப்போது ராகு 7ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் கவனமாக பழகுங்கள். கேது இதுவரை 2ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பகைவர் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயத்தை ஏற்படுத்தி இருப்பார். கேது இப்போது உங்கள் ராசிக்கு வருவதால் காரிய தடை, உடல் உபாதை ஏற்படலாம். ஆனால் கேதுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வையால் பிரச்னைகளை முறியடித்து வெற்றிக்கு வழிகாண்பீர்கள். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும்.

இனி விரிவான பலனை காணலாம்.
பொதுபலன்: சமூகத்தில் மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். ஆனாலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். செலவு அதிகரிக்கும். சிக்கனம் தேவை. சிலருக்கு உறவினர் வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம். விடாமுயற்சி இருந்தால் புதிய வீடு கட்டலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிக்கும். 2023 ஏப்.22க்கு பிறகு தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

வியாபாரிகள்: எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதுாக்கலாம். சற்று கவனம் தேவை. நிர்வாகச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு வீண்விரயம் ஏற்படலாம். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். புதிய முதலீட்டை தவிர்ப்பது நல்லது. 2023 ஏப்.22க்கு பிறகு எந்த தடையையும் உடைத்தெறியலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.

பணியாளர்கள்: வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். அதே நேரம் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம். சிலருக்கு விருப்பமில்லாத இடத்துக்கு மாற்றம் வரலாம். 2023 ஏப்.22க்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள்: சீரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தடை குறுக்கிடலாம். தீவிர முயற்சியின் பேரில் அனுகூலம் உண்டாகும். திறைமைக்கு ஏற்ப புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம். ஆனால் பண வரவில் எந்த குறையும் இருக்காது.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். எளிதாக படித்து அதிக மதிப்பெண் எடுத்து விடலாம் என்று அசட்டையாக இருக்க வேண்டாம். இப்போது கஷ்டப்பட்டு படிப்பது எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.
விவசாயிகள்: உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கப் பெறுவர். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். 2023 ஏப். 22க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளின் வகையில் இருந்த பிரச்னை மறையும். 2023 ஏப். 22க்கு பிறகு கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் இணக்கம் உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.
உடல்நலம்: அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கப்படலாம். 2023 ஏப்.22 க்கு பிறகு மனதில் தளர்ச்சி, வீண் கவலை முதலியன மறையும்.
பரிகாரம்: ஆலங்குடி, திருச்செந்துார், திட்டக்குடி, பட்டமங்கலம் போன்ற குருத்தலங்களுக்கு செல்லுங்கள். ஏழைகள் படிக்க பணஉதவி செய்யவும். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்குங்கள். சதுர்த்தியன்று விநாயகரையும் வழிபடுங்கள்.

சுவாதி : இடமாற்றம் ஏற்படும்

இந்த ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலனை தரும் என்றாலும், மற்ற கிரகங்களால் ஓரளவு நன்மை கிடைக்கும். ராகு இதுவரை 8ம் இடமான ரிஷப ராசியில் இருந்து முயற்சியில் தடையையும், குடும்பத்தில் பிரிவையும் ஏற்படுத்தி இருப்பார். உறவினர் வகையிலும் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டிருக்கும். சிலர் ஊர் விட்டுஊர் செல்லும் நிலையும் உருவாகி இருக்கும். இப்போது ராகு 7ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் கவனமாக பழகுங்கள். கேது இதுவரை 2ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பகைவர் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயத்தை ஏற்படுத்தி இருப்பார். கேது இப்போது உங்கள் ராசிக்கு வருவதால் காரிய தடை, உடல் உபாதை ஏற்படலாம். ஆனால் கேதுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வையால் பிரச்னைகளை முறியடித்து வெற்றிக்கு வழிகாண்பீர்கள். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும்.
இனி விரிவான பலனை காணலாம்.
பொதுபலன்:
முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லாத காலக்கட்டம். எடுத்த காரியத்தில் அவ்வப்போது தடைகள் வரும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவுக்கு தகுந்தாற் போல் செலவும் இருக்கும். வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். சுபநிகழ்ச்சிகளில் முடிவு எடுக்க தாமதம் ஏற்படலாம். பொருட்கள் திருட்டு போக வாய்ப்புண்டு. இருப்பினும் குருவின் 9ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் பிரச்னைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். 2023 ஏப். 22க்கு பிறகு சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
வியாபாரிகள்:
வியாபாரத்தில் இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பணவிரயம் ஏற்படலாம். வாடிக்கையாளரை விடாமுயற்சியுடன் தக்க வைக்க வைப்பது நல்லது. சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். குருவின் 9ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் இருந்தால் முன்னேற்றம் அடையலாம். 2023 ஏப். 22க்கு பிறகு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஆதாயத்துடன் திரும்புவர்.
பணியாளர்கள்:
பணிப்பளுவும், அலைச்சலும் இருக்கும். சிலருக்கு திடீர் இட, பணி மாற்றம் ஏற்படலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் பணியற்றவும். குருவின் பார்வையால் வழக்கமான சம்பளஉயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது. 2023 ஏப். 22க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். சிலர் பணி விஷயமாக வெளியூரில் தங்க நேரிடலாம். அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
அரசியல்வாதிகள் சிலர் மனஉளைச்சலுடன் காணப்படுவர். தலைமையின் எதிர்ப்பசை் சந்திக்க நேரிடலாம்.
மாணவர்கள்: ஆசிரியர்களின் உதவியை கேட்டு பெறுவது நல்லது. குருவின் பார்வையால் தேர்வுகள் சிறப்பாக எழுதுவீர்கள்.
விவசாயிகள்: பணிகள் சீராக நடக்கும்.. உழைப்பே உங்கள் முதலீடு. அனாவசிய செலவை குறையுங்கள். ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வழக்கு விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.
பெண்கள்: குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். வீட்டினுள் பிரச்னை தலைதுாக்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். 2023 ஏப். 22க்கு பிறகு கன்னியருக்கு திருமணம் கைகூடும்.
உடல்நலம்: உடல் நலனை பொறுத்தவரை கேதுவால் சில நோய் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது.
பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து அதை காக்கைக்கு போடுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர்ச்சாதம் படைத்து வழிபடலாம்.

விசாகம் 1, 2, 3-ம் பாதம்: அலைச்சல் அதிகரிக்கும்

இந்த ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலனை தரும் என்றாலும், மற்ற கிரகங்களால் ஓரளவு நன்மை கிடைக்கும். ராகு இதுவரை 8ம் இடமான ரிஷப ராசியில் இருந்து முயற்சியில் தடையையும், குடும்பத்தில் பிரிவையும் ஏற்படுத்தி இருப்பார். உறவினர் வகையிலும் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டிருக்கும். சிலர் ஊர் விட்டுஊர் செல்லும் நிலையும் உருவாகி இருக்கும். இப்போது ராகு 7ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் கவனமாக பழகுங்கள். கேது இதுவரை 2ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பகைவர் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயத்தை ஏற்படுத்தி இருப்பார். கேது இப்போது உங்கள் ராசிக்கு வருவதால் காரிய தடை, உடல் உபாதை ஏற்படலாம். ஆனால் கேதுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வையால் பிரச்னைகளை முறியடித்து வெற்றிக்கு வழிகாண்பீர்கள். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும்.
இனி விரிவான பலனை காணலாம்.
பொதுபலன்:
ராகுவால் இடப்பெயர்ச்சி, அவப்பெயரை சந்திக்க நேரலாம். சிலர் தீயவர்களோடு சேர சூழ்நிலை உருவாகும். அனைவரிடமும் கவனமாக பழகுவது நல்லது. தடைகள் வந்தாலும் அவற்றை கேதுவின் பார்வையால் சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். பணவிரயம் மறைந்து பொருளாதாரம் பெருகும்.
மனதில் அவ்வப்போது வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும் சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஆனால் குருவின் பார்வையால் நற்பலன் உண்டாகும். சகோதரிகளால் பொன், பொருள் சேரும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

தொழில்: வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்க நேரிடும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கவனம் தேவை. ஆன்மிக சம்பந்தமான பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் சீரான லாபத்தைக் காண்பர். 2023 ஏப். 22க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தைத் தரும். வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பணியாளர்கள்: சுதந்திரமற்ற நிலையில் இருப்பர். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். குருவின் 9ம் இடத்துப் பார்வையால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். ங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

கலைஞர்கள்: புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். சக கலைஞர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல்வாதிகள்: பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம். கவனம்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். குருவின் பார்வையால் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு வருமானம் உயரும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். 2023 ஏப்.22 க்கு பிறகு குருவால் பணவரவு கூடும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

உடல் நலம்: சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. மனதிலும் நிம்தி நிலவும்.
பரிகாரம்: பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள். ஞாயிறன்று ராகு காலத்தில் துர்க்கை, பைரவருக்கு பூஜை செய்யலாம். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement