தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை ஐ.பி.எஸ்., என்று கேள்விப்பட்டேன். ஆனால், வெளியுறவுத் துறை அதிகாரி போல இலங்கை பிரச்னையை பற்றி தெளிவான புரிதலுடன் பேசினார். தமிழர், சிங்களர் வேறுபாடு இல்லாமல் இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி அள்ளி கொடுத்திருக்கிறார். மோடி, ராஜதந்திரம் மிக்க தலைவர். பொறுமையும், பெருந்தன்மையும் அண்ணாமலைக்கு அதிகம் உள்ளது.
டவுட் தனபாலு: இலங்கை பிரச்னையில ஆவேசமா பேசி, அப்பாவி தமிழர்களின் உணர்வுகளை துாண்டிவிட்டு, அரசியல் நடத்திட்டு இருந்த, 'பெட்டி' கட்சி தலைவர்கள் மத்தியில, அங்கயே போய் நிலவரத்தை நேரில் கண்டறிந்து வந்த அண்ணாமலை பாராட்டுக்குரியவர் என்பதில், 'டவுட்'டே இல்லை... அதேநேரம், அண்ணாமலையை பாராட்டிய உங்களுக்கும் காவி சாயம் பூசிடுவாங்க பாருங்க!
***
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: மாணவர் காங்கிரசார், கட்சி பதவிகளுக்காக பணியாற்றாமல், பொது வாழ்க்கைக்காக பணியாற்ற வேண்டும். காந்தியும், ஈ.வெ.ரா.,வும் எந்த பொறுப்பும் வகிக்கவில்லை. ஆனால், மிகப் பெரிய தலைவர்களாக உருவாகினர். இன்னும் கடுமையாக உழைத்தால் காங்கிரஸ் கட்சியால், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும்.
டவுட் தனபாலு: ஹைய்யோ... ஹைய்யோ... சிரிச்சு சிரிச்சு விலா நோகுது போங்க... 'தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்' என்பதை இங்க இருக்கிற உங்க கட்சி தலைவர்கள் மட்டுமில்லை; டில்லியில இருக்கும் சோனியா, ராகுல் கூட நம்ப மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
***
பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம்: 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டோர், தனியார் மருத்துவமனைகளில் போட்டு கொள்ளலாம். 18 - 59 வயதுக்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படாது. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் போட்டு கொள்ளலாம்.
டவுட் தனபாலு: தமிழக திராவிடக் கட்சிகள், எத்தனையோ இலவசங்களை கொடுத்து, மக்களையும், தமிழகத்தின் பொருளாதாரத்தையும் கெடுத்து, குட்டிச்சுவராக்கி வச்சிருக்குது... மக்களின் உயிர் காக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமா வழங்கினா, குடியா முழுகிடும் என்பது தான் எங்களது, 'டவுட்!'
மாணவர்கள் வந்துதான் கட்சிக்கு விடிவு மற்றபடி இருப்பவர்களெல்லாம் அடித்துக்கொள்ளத்தான் லாயக்கு என்கிறா.