Load Image
Advertisement

பராமரிப்பின்றி புதர்மண்டிய பல்கலை பூங்காக்கள்

மதுரை, மதுரை காமராஜ் பல்கலையில் பராமரிக்கப்படாத பூங்காக்களில் புதர்மண்டியுள்ளதுடன் பாம்புகள் கூடாரமாக மாறி வருகிறது.பல்கலை வளாகத்தை பசுமையாக்க 2017ல் மாணவியர் விடுதிகளுக்கு அருகே இரு ஏக்கரில் மாணவியர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் நடைப்பயிற்சிக்கான பாதை, பொழுது போக்கு உபகரணங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளன. ஊழியர்கள் குடியிருப்பில் சிறுவர்களுக்கான பூங்கா 4 ஏக்கரில் உருவாக்கப்பட்டது. சிறுவர்கள் விளையாட பல்வேறு உபகரணங்கள் இதில் உள்ளன. இப்பூங்காக்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளன.ஊழியர்கள் கூறியதாவது: பல லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட இரு பூங்காக்களிலும் புதர்கள் மண்டியுள்ளன. பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பல்கலை வளாகத்தில் பல இடங்களில் துாய்மை பணிகள் நடக்கின்றன. பூங்காக்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. நாக் கமிட்டி ஆய்வுக்கு வரவுள்ள நிலையில் இவற்றை பராமரிக்க துணைவேந்தர் கிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement