அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
நிலவுக்கு பட்டாம்பூச்சி
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில், பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழ்கின்றனர். பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. இங்கு மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. பிரிட்டன் முதன்முதலாக நிலவில் தரையிங்கும் விதமான ரோவரை அனுப்ப உள்ளது. இது 2021ல் நிலவில் தரையிறங்க உள்ளது. இந்த ரோவர் பட்டாம்பூச்சி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப்பின் நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமை பெறும்.
தகவல் சுரங்கம்
நீளமான சுரங்க சாலை
இந்தியாவின் நீளமான சுரங்க சாலை என்ற பெருமையை 'செனானி - நாஷ்ரி' சுரங்க சாலை பெற்றுள்ளது. இது ஸ்ரீநகர் முதல் ஜம்மு செல்லும் 'என்.எச்.44ல்' அமைக்கப் பட்டுள்ளது. மொத்த துாரம் 9.28 கி.மீ. இதற்கான பணி 2011ல் தொடங்கியது. இச்சாலையை 2017 ஏப்.2ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது 43 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து
3,937 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் ஜம்மு - ஸ்ரீநகர் பயண நேரத்தில் இரண்டு மணி நேரம் குறைந்துள்ளது. நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!