Load Image
Advertisement

சாத்விக்சாய்ராஜ்–சிராக் ஜோடி ஏமாற்றம்: மலேசிய ஓபன் பாட்மின்டனில்

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தோல்வியடைந்தது.

கோலாலம்பூரில், மலேசிய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் வெய் கெங் லியாங், சாங் வாங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 16-21 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-11 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய இந்திய ஜோடி 15-21 என கோட்டைவிட்டது.



ஒரு மணி நேரம், 4 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி 16-21, 21-11, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இதன்மூலம் இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே சிந்து, செய்னா, ஸ்ரீகாந்த், பிரனாய், லக்சயா சென் உள்ளிட்டோர் தோல்வியை தழுவினர்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement