Load Image
Advertisement

பிரனாய் அதிர்ச்சி தோல்வி: மலேசிய ஓபன் பாட்மின்டனில்

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரனாய் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

கோலாலம்பூரில், மலேசிய ஓபன் 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரனாய், ஜப்பானின் கோடாய் நரோகா மோதினர். முதல் செட்டை 16-21 என இழந்த பிரனாய், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-19 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய இவர் 10-21 என கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 24 நிமிடம் நீடித்த போட்டியில் பிரனாய் 16-21, 21-19, 10-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.



இந்திய ஜோடி அபாரம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லியு யு சென், ஓ ஜுவான் யி ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 17-21, 22-20, 21-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement