Load Image
Advertisement

மகரம்

மகரம் : புதன் நன்மைகளை வழங்குவார். சனிக்கிழமையில் நவக்கிரகங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபட சங்கடம் போகும்.
உத்திராடம் 2,3,4 : உங்கள் ராசிநாதன் ராசிக்குள்ளாகவே வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் சிரமம் தோன்றும். பெரும்பாலான கிரகம் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சி இப்போது வேண்டாம். வெள்ளி அன்று செலவு அதிகரிக்கும்.

திருவோணம் : கடந்த வார சங்கடத்தில் இருந்து விடுபடுவீர். தசா புத்தி நன்றாக இருப்பவர்களுக்கு முயற்சி ஒவ்வொன்றாய் நிறைவேறும். தொழிலில் உண்டான தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். சனிக்கிழமை பண விவகாரத்தில் கவனம் தேவை.
அவிட்டம் 1,2 : நாலாமிட ராகு அலைச்சலை அதிகரிப்பார். ஏழாமிட சுக்கிரன் ஆசைகளை உண்டாக்குவார் வாழ்க்கையை தடுமாற வைப்பார் என்பதால் எதிர்பாலினரிடம் எச்சரிக்கை அவசியம். உழைப்பில் கவனம் செலுத்தினால் தேவைக்கேற்ற வருமானம் வரும். ஞாயிறு அன்று செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Advertisement