Advertisement

புழல் சிறையில் நடக்கும் விவசாயம் வேர்க்கடலை அறுவடை செய்த கைதிகள்

சென்னை புழல் மத்திய சிறையில், தண்டனை கைதிகள், தங்களுக்கு தெரிந்த சுயதொழில் அல்லது பல்வேறு வேலைகளை செய்கின்றனர். கைதிகளின் மறுவாழ்விற்கான தொழிற் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், 20க்கும் மேற்பட்ட கைதிகள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், 1 ஏக்கர் நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டு, பராமரித்து வந்தனர். முதிர்ந்த நிலைக்கு வந்த வேர்க்கடலையை, நேற்று அவர்கள் அறுவடை செய்தனர். சிறை அதிகாரிகள், விவசாய கைதிகளை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement