Advertisement

இரவில் ஏன் வந்தீர்கள் என ஆதரவாளர்கள் ஆவேசம்

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த சென்றபோது, அதிகாரிகளை சுற்றி வளைத்து தாக்கினர். அவர்களது கார் கண்ணாடிகளையும் உடைத்தனர். 4 அதிகாரிகள் காயமடைந்து ஆஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ளனர். இதனால் தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கரூர் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகினர். இந்தச் சூழலில், கரூர் ராயனூரில் உள்ள தாரணி சரவணன் வீட்டுக்கு நள்ளிரவு 11.45 மணிக்கு 5 கார்களில் 25 அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். துணை மேயர் ஆஸ்பத்திரியில் இருப்பதாக பணியாளர்கள் கூறினர். இதனால், கேட்டில் நோட்டீசை ஒட்டி வீட்டுக்கு சீல் வைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement