Advertisement

இடி தாக்கி பெண் பலி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஓம்நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி இன்பமலர், 44. இன்பமலர் சக தொழிலாளிகளுடன், கெராடா மட்டம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டிருந்தபோது, மழை பெய்தது. சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் மழை தீவிரமடைந்தது. இடி தாக்கியதில், இன்பமலர் அதே இடத்தில் இறந்தார். கோத்தகிரி போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement