Advertisement

ரயிலில் கஞ்சா கடத்தல் பீகாரை சேர்ந்த 2 பேர் கைது

சென்னை ஓட்டேரி போலீசார் பெரம்பூர் ஜமாலயா பேருந்து நிலையம் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 வட மாநில வாலிபர்களை சோதனை செய்ததில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் பீகாரைச் சேர்ந்த முகமது அக்தர் (25), அகிபூர் ரஹ்மான் (19) என்பதும் கோயம்பேட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது. பீகாரிலிருந்து ரயிலில் வரும் போது கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர். 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement