Advertisement

வேஸ்ட் பாட்டிலுக்கு ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகம்

தமிழக முதல்வரின் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா நெல்லை என்ற புதிய திட்டம் நெல்லை மாநகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் தமிழக முதல்வரின் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா நெல்லை என்ற திட்ட துவக்க விழா பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்டில் நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். ஒருமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களுக்கு ஒரு ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement