Advertisement

மீனாட்சி சுந்தரேசுவரர் கோடை வசந்த உற்சவ விழா

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவ விழா 27ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது. சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பல மண்டபத்தில் பிரியாவிடை, மீனாட்சியுடன் சுந்தரேஸ்வரர் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆருள்பாலித்தார். சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் வைகை வடகரையில் உள்ள செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருவார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement