Advertisement

50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்

திருச்செங்கோடு- வேலூர் ரோட்டில் 85 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது மகாதேவ வித்யாலயம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி . இந்தப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. 1966-67 முதல் 1971-72 வரை படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும் வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான சிங்காரவேல் தலைமை தாங்கினார். பள்ளியின் அந்த நாளைய ஆசிரியர்கள் நடேசன், நாச்சிமுத்து ஆகியோர் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின் ஒருவரை ஒருவர் சந்தித்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement