Advertisement

கூலிப்படையை ஏவி மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த ஏட்டு

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். நகைக்கடை உரிமையாளர். இந்து மக்கள் கட்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார். மணிகண்டன் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஏட்டு ஹரிஹர பாபு தனது மனைவிக்கும், மணிகண்டனுக்கும் கள்ள உறவு இருப்பதாக சந்தேகித்தார். இதையடுத்து கூலிப்படையை ஏவி மணிகண்டனை ஏட்டு கொலை செய்தது தெரியவந்தது. ஹரிஹரபாபு, திருச்செந்தூரை சேர்ந்த ஹைதர் அலி உட்பட 7 பேரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement