Advertisement

கெளரம்மா கோவில் திருவிழா வெகு விமரிசை!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கும்ளாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த கௌரம்மா கோயில் உள்ளது.தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 7 ஏரிகளில் இருந்து மண் மற்றும் தண்ணீர் எடுத்து வந்து கௌரம்மா மற்றும் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன. கோயிலில் வைத்து ஒரு மாத காலம் பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து கௌரம்மா மற்றும் விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் அமர வைத்து தேர்த்திருவிழா நடந்தது. கும்ளாபுரம், தளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் மற்றும் கர்நாடகாவின் ஆனெக்கல், சந்தாபுரம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கௌரம்மாவை வழிபட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement