பரதநாட்டியம், நாட்டுப்புற மற்றும் இந்திய மொழிகளின் கோர்வையில் திரையிசை நடனங்கள் அங்கு கூடியிருந்த மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிறநாட்டு தொழில்முறை கலைஞர்களுடன் போட்டியிட்ட நமது தன்னார்வ குழு மூன்றாம் பரிசை வென்றது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் மரகதமணியின் திரைப்படப் பாடல்களின் இசைக்கு ஏற்றவாறு கலைக்குழு உறுப்பினர்கள் நடனமாடி பரிசு பெற்றது உள்ளபடியே கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றால் அது மிகையாகாது.
சங்கத்தின் இணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் கலைக்குழு உறுப்பினர்கள் பத்மப் பிரியா, அருணா, கீர்த்தனா, ஹரிவேந்தன் ரகுபதி, மெய்யப்பன் சங்கர் ஆகியோரால் கலை நிகழ்ச்சி செவ்வனே கொண்டு செல்லப்பட்டது. ஆடை அணிகலன் போட்டியில் ஹரிவேந்தன் ரகுபதி இரண்டாம் பரிசை தட்டிச் சென்றார். நிகழ்வினை கண்டுகளிக்க ஏறக்குறைய 3000 பேர் புசான் உட்பட கொரியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். பூசான்வாழ் தமிழ் மக்கள் அரங்கிற்கு வந்து நமக்கு ஆதரவு அளித்தனர்.
தமிழ் சங்கத்தின் பணிகளை கொரியாவில் பல்வேறு இடங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு எடுத்து செல்லும் தலைவரின் பணிகளில் மிக சீரிய முயற்சியின் வெற்றி இந்த முயற்சி. .கொரியா புசான் நகரில் நடக்கும் முதல் தமிழ் சங்க ஒருங்கிணைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கத்தின் பொருளாளர் முத்துசாமி, ஜெரோம் உள்ளிட்டோர் உரிய பொருளாதார உதவி தொடர்பான ஏற்பாடுகளை செய்தனர். சங்கத்தின் செயலாளர் சரணவன் அரங்கம் மற்றும் நிகழ்வு மேலாண்மையை திற்பட செய்ய தலைவர் அரவிந்த ராஜா ஆட்புல ஒருங்கிணைப்பு, போக்குவரத்து மேலாண்மை, உடனடி உதவிகள் உள்ளிட்ட பணிகளை செய்தார். துணைத்தலைவர் விஜயலட்சுமி தகவல் மேலாண்மையையும், இணைச்செயலாளர்கள் சம்பத், பாரதி, சிவா, பாலாஜி, மற்றும் ராஜா மணிகண்டன் உள்ளிட்டோர் அரங்க நிர்வாகம், வரவேற்பு உள்ளிட்ட பணிகளை செய்தனர்.
சங்கத்தின் கலைக்குழுவிற்கு விதையிட்ட மூத்த உறுப்பினர்களான வெங்கடேசன், கருணாகரன், சரண்யா, இராமசுந்தரம், தற்போதைய தலைவர் அரவிந்த ராஜா மற்றும் ஏனைய நிர்வாகிகளின் உழைப்பு, முயற்சி, திட்டமிடுதலால், கொரிய தமிழ்ச் சங்கமானது சர்வேதச மேடையை அடைந்துள்ளது, கொரியாவாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியையும் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!