- நமது செய்தியாளர் ஞானகுணளன்
ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை
ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் அருணி மலலசேகர 15-01-2022 அன்று திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார். ஆளுநரின் ஆளுநரின் துணை செயலாளர் ஜெயக்குமார், உதவி ஆளுநர் டாக்டர் கருணாகரன் இணைந்து கொண்டார்கள். திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - த அகிலன் விருந்தினர்களை வரவேற்று, வரவேற்புரையை நிகழ்த்தினார். செயலாளர் க பிரபாகரனால் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளின் அறிக்கை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.
தி / ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வெற்றியாளர் எம்.அகன்ஷா ரொக்க விருது மூலம் பாராட்டப்பட்டு கௌரவிக்கப் பட்டார். தலைவர் அகிலனால் புல் வெட்டும் இயந்திரம் ஓன்று வேலாயுதத்திற்கு வழங்கப் பட்டது. தி / கணேச வித்யாலயம் - தி / தங்கபுரம் பாடசாலையின் தலைமையாசிரியர்கள் “கிராமப் பள்ளிகளுக்கு கணனி” என்ற திடடத்தின் கீழ் கணினிகளைப் பெற்றுக் கொண்டனர். மேலும் 6 பாடசாலைகளுக்கு உரிய நேரத்தில் வழங்கப் படும்.
ஆளுநரின் துணை செயலாளர் ஜெயக்குமாரால் மாவட்ட ஆளுநர் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆளுநர் அருணி மலலசேகர, தமது உரையில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளை பாராட்டியதுடன் மேலும் அதிக தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். புதிய திட்டங்களை உருவாக்கி மக்களுக்கு சிறந்த சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் ரோட்டரி பெயரை எடுத்து செல்ல வேண்டும் என எடுத்துரைத்தார்
- நமது செய்தியாளர் ஞானகுணளன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!