உயிரியியல் உற்பத்தி மையம் ஆய்வு
மதுரை: மேலவளவில் உலக வங்கி நிதியுதவியுடன் பெண் விவசாயிகளால் நடத்தப்படும் உயிரியியல்காரணி உற்பத்தி மையத்தை உலக வங்கி அலுவலர் கிம்மத் படேல் ஆய்வு செய்தார்.பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் உப்பாறு உபவடி நிலப்பகுதியின் கீழ் உற்பத்தி மையம் செயல்படுகிறது. விவசாய தொழில்நுட்ப ஆலோசகர் ஷாஜகான், சென்னை தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர்வித்யாசாகர், மதுரை வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) சுப்புராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகரன், நீர்மேலாண்மை பயிற்சி நிலைய, தோட்டக்கலை துணை இயக்குநர்கள் லட்சுமி பிரபா, ரேவதி வேளாண் உதவி இயக்குநர் சுபா சாந்தி, வேளாண் அலுவலர் விக்னேஷ்குமார் உடனிருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!