அறிமுகம்:புவனேஸ்வரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் - என்.ஐ.எஸ்.இ.ஆர்., இந்திய அரசின் அணு சக்தி துறை- டி.ஏ.இ.,யின் கீழ் செயல்படும் ஓர் தன்னாட்சி நிறுவனம். அதேபோல், டி.ஏ.இ.,யின் கீழ் செயல்படும் மற்றுமொரு நிறுவனம் மும்பை பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் பார் எக்ஸ்லன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் - சி.இ.பி.எஸ்.,’.
இந்த கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., - உயரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கை, என்.இ.எஸ்.டி., தேர்வு வாயிலாக நடைபெறுகிறது.
உதவித்தொகை: இப்படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்கள் ‘இன்ஸ்பயர்’ அல்லது ‘திஷா’ புரொகிராம் வாயிலாக ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெறும் வாய்ப்பு உண்டு. மேலும், கோடைகால இன்டர்ன்ஷிப்பிற்காக ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.nestexam.in எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நேரம்: 3:30 மணிநேரம்
தேர்வு மையங்கள்: நாடு முழுவதிலும் அனைத்து முக்கிய நகரங்கள் உட்பட மொத்தம் 120 மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாகவே இத்தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 17
தேர்வு நாள்: ஜூன் 24
விபரங்களுக்கு: www.nestexam.in
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!