Load Image
Advertisement

வேளாண் பல்கலையில் 8 புதிய படிப்புகள் அறிமுகம்

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நான்கு சான்றிதழ் படிப்புகள், நான்கு டிப்ளமா படிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, சென்னையில் அளித்த பேட்டி:

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஏற்கனவே காளான் வளர்ப்பு, மூலிகை பயிர்கள் உள்ளிட்ட மொத்தம் 44 வகையான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
தற்போது, அலங்கார தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்பு தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத் தோட்டம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தோட்டக்கலை செடிகள் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணைய வழி தொழில்நுட்பங்கள், வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட டிப்ளமா படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வயது வரம்பு இல்லை. சென்னை நகர்ப்புறவாசிகளுக்கு, கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் செயல்படும் தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்கத்தில் பயிற்சி பெறலாம்.
மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மையங்கள் வாயிலாக பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement