Load Image
Advertisement

மார்ச் 1 முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்

தமிழக பள்ளிக்கல்வித்துறை 2022- 23ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3 வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், செய்முறை தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும்.
பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் ஜன.,30, 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் தனித் தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதன்படி, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு மே 17ம் தேதியும் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement