பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு ஒதுக்கீட்டிலும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும், நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் பதிவு இன்று துவங்குகிறது என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமையின் முந்தைய அறிவிப்பில், இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நீட் தேர்வுக்கான விபரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நீட் நுழைவு தேர்வு அறிவிப்பு வெளியீடு
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!