Advertisement

விவசாயியை கொலை செய்து தலையை மாமனார் வீட்டு முன் வீசியவர் கைது மனைவி நடத்தையில் சந்தேகமுற்று வெறிச்செயல்

ADVERTISEMENT
தென்காசி:தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே மனைவி நடத்தையில் சந்தேகமுற்று விவசாயி தலையை துண்டித்து கொன்று தலையை 30 கி.மீ., துாரம் டூவீலரில் எடுத்து சென்று மாமனார் வீட்டின் முன்பு போட்டுச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கண்ணாடிகுளத்தை சேர்ந்தவர் வேல்சாமி 30. துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இளநீர் கடை நடத்தி வருகிறார். அங்கு மனைவி இசக்கியம்மாளுடன் வசித்து வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று தகராறில் ஈடுபட்டார். சில நாட்களுக்கு முன் மனைவியை வீட்டில் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றார். ஆனால் இசக்கியம்மாள் தப்பினார். இதுகுறித்து அவர் புகார் செய்தும் போலீசார் விசாரிக்கவில்லை. இதனால் கயத்தாறு சன்னதுபுதுக்குடி மலையூரான் குடியிருப்பில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு இசக்கியம்மாள் சென்றுவிட்டார்.

கண்ணாடிகுளத்தில் வசிக்கும் விவசாயி முருகனுடன் 42, மனைவிக்கு தொடர்பு இருப்பதாக வேல்சாமி சந்தேகமுற்றார். நேற்று மதியம் கண்ணாடிகுளத்தில் முருகனை வேல்சாமி அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தார். பின் ரத்தம் சொட்ட தலையை ஒரு சாக்கு பையில் எடுத்துக்கொண்டு டூவீலரில்30 கிலோ மீட்டர் பயணித்து மலையூரான்குடியிருப்பிலுள்ள மனைவி பெற்றோர் வீட்டு முன்பாக வீசி தப்பினார். போலீசார் பின் தலையை மீட்டு வேல்சாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement