Advertisement

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறும்: நட்டா நம்பிக்கை

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தை ராஜ்யசபாவில் துவக்கி வைத்து பேசிய பா.ஜ., தலைவர் நட்டா, ‛‛காங்கிரசிடம் உள்ள மொத்த எம்.பி.,க்களை விட பா.ஜ.,வில் ஓ.பி.சி., சமுதாய எம்.பி.,க்கள் அதிகம் பேர் உள்ளனர். லோக்சபாவில் நிறைவேறியது போல், ராஜ்யசபாவிலும் ஒரு மனதாக நிறைவேறும் என நம்புகிறேன்'' எனக்கூறினார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் ராஜ்யசபாவில் இன்று துவங்கியது. இதனை துவக்கி வைத்து நட்டா பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி அன்று முதல் புதிய பார்லிமென்ட் செயல்படுகிறது.

லோக்சபாவில் நேற்று, பெண்கள் மசோதா( நாரி சக்தி வந்தன் அதிநியம்) எந்த தடையுமின்றி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், இங்கேயும் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டால், 2029 ல் இந்த மசோதாவின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பெண் எம்.பி.,க்கள் பார்லிமென்டில் இருப்பார்கள். இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்களை, ‛சக்தி, தேவி' என பார்க்கிறோம். அவர்கள் சமூகத்தை வழிநடத்துகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஓபிசி பிரிவை சேர்ந்த செயலாளர்களை நியமித்தது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி தான் முதன் முதலல் ஓபிசி சமுதாயத்தில் இருந்து வந்த பிரதமரை அளித்தது.
மத்தியில் ஓபிசி சமுதாயத்தை சேர்ந்த 27 பேர் அமைச்சர்களாக உள்ளனர். காங்கிரசிடம் உள்ள மொத்த எம்.பி.,க்களை விட, பா.ஜ.,வில் ஓபிசி சமுதாய எம்.பி.,க்கள் அதிகம் உள்ளனர். இவ்வாறு நட்டா பேசினார்.



வாசகர் கருத்து (1)

  • செந்தமிழ் கார்த்திக் - Madurai to Chennai ,இந்தியா

    நீங்களும் உங்க சனாதன தர்மமும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement