மாமூல் வசூல் ரவுடி சிக்கினார்
டி.பி., சத்திரம்:கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் முக்கிஷ் பாய், 48; சென்னை, டி.பி., சத்திரம் பகுதியில் துரித உணவு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது கடைக்கு வந்த வாலிபர், கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளார்.
இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த டி.பி., சத்திரம் போலீசார், அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர், பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜேஷ்கண்ணா, 28, என தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர். இவர், மீது பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த டி.பி., சத்திரம் போலீசார், அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர், பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜேஷ்கண்ணா, 28, என தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர். இவர், மீது பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!