Advertisement

ஸ்டெர்லைட் ஆலை கழிவு அகற்றும் பணி கண்காணிக்க 9 பேர் கொண்ட குழு

தூத்துக்குடி,:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றும் பணி 9 பேர் குழுவினரால் கண்காணிக்கப்படும் என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் தற்போது மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது குறித்து தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை தனியார் நிறுவனம் மூலம் அகற்ற திட்டமிட்டுள்ளோம். இதனை கண்காணிக்க சப் கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் 9 பேர் குழு அமைக்கப்படுகிறது.

டி.எஸ்.பி, மாசு கட்டுப்பாட்டு வாரிய இன்ஜினியர், தீயணைப்பு அலுவலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் இருவர் உள்ளிட்ட 9 பேர் அதில் இருப்பர். ஆலை கழிவுகள் காலை 6 :00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் அகற்றப்படும். இதனை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

சப் கலெக்டர் அலுவலகத்திலும் இதற்காக கட்டுப்பாட்டு அறை செயல்படும். ஆலையில் எப்போதும் போலீசார் பாதுகாப்பில் இருப்பர். கழிவுகள் அகற்றப்படும் வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் 9 பேர் குழு ஆய்வுகள் மேற்கொள்வர். இதனை அனைத்து தரப்பினருக்கும் தெரிவித்துள்ளோம், என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement