Advertisement

சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் 7 போலீசாரிடம் விசாரணை

திருநெல்வேலி:நெல்லையில் 7 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அம்பை பகுதியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் 4 வழக்குகளை பதிவு செய்தனர்.

கல்லிடைக்குறிச்சி ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உட்பட10போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.

சி.பி.சி.ஐ.டி., ஆர்கனைஸ்டு கிரைம் யூனிட் அலுவலகத்தில் வி.கே.புரத்தில் பணியாற்றிய பெண் எஸ்.ஐ., அம்பையில் பணியாற்றிய 4போலீசாரிடம் ஏ.டி.எஸ்.பி., சங்கர் விசாரணை நடத்தினார்.

சி.பி.சி.ஐ.டி., ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உலகராணி 2 போலீசாரிடம் விசாரணை நடத்தினார். ௭ பேரிடம் விசாரணை நடந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement