ADVERTISEMENT
திருவண்ணாமலை: வைகாசி அமாவாசையை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்ணா முலை அம்மன் சமேத அண்ணாமலையார் உற்சவருக்கு மூலிகைப் பொடிகள், மஞ்சள், பஞ்சாமிர்தம், 508 லிட்டர் பால், 100 லிட்டர் நெய், 50 லிட்டர் தேன், 25 கிலோ சந்தனம், 50 கிலோ விபூதி மற்றும் பல வண்ண மலர்களால் மஹா அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராள மான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!