Advertisement

பகல் 12:30 - 3:30 நடை சாத்த திருவண்ணாமலை குருக்கள் மனு

திருவண்ணாமலை : 'ஆகம விதிப்படி, மதியம், 12:30 மணி முதல் மாலை, 3:30 மணி வரை கோவில் நடை மூடப்பட வேண்டும்' என, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் குருக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மதியம், 12:30 மணிக்கு சாத்தப்படும். மாலை, 3:30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு, 9:00 மணிக்கு சாத்தப்படும்.

கொரோனா தொற்று துவங்கியதற்கு முன் இந்த நேரம் தான் வழக்கத்தில் இருந்தது. தொற்று காலத்தில், பக்தர்கள் இடைவெளி விட்டு தரிசனம் செய்ய வசதியாக, அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

இரவு, 9:00 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. கொரோனா குறைந்து, இயல்பு நிலை திரும்பிய போதும், அதே நடைமுறையை கோவில் நிர்வாகம் பின்பற்றியது.

இந்நிலையில், கோவிலில் பணிபுரியும் குருக்கள், கோவில் இணை ஆணையர் குமரேசனிடம், 'ஆகம விதிப்படி நடை திறந்து மூடப்பட வேண்டும். பகல் 12:30 மணி முதல் மாலை, 3:30 மணி வரை நடை மூடப்பட வேண்டும்' என, நேற்று முன்தினம் மனு அளித்தனர்.

இதை ஏற்ற கோவில் இணை ஆணையர், கோவில் நடையை நேற்று, 12:30 மணிக்கு சாத்தினார். இதற்கு, பக்தர்களிடையே எதிர்ப்பு எழுந்தது. எனவே, மீண்டும், 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

'தற்காலிகமாக நடை சாத்தப்படாத முறை பின்பற்றப்படும். அறநிலையத்துறை ஆணையர், அமைச்சரிடம் அனுமதி பெற்று, மதிய நேரத்தில் நடை சாத்தப்படும் முறை அமல்படுத்தப்படும்' என, இணை ஆணையர் கூறினார். இதை குருக்கள் ஏற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement