Advertisement

திருவண்ணாமலையில் 2 நாளில் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை ஒட்டி, திருவண்ணாமலையில் இரண்டு நாளில், 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

சித்ரா பவுர்ணமி நாளான நேற்று, திருவண்ணாமலையில், பல லட்சக்கணக்கானோர், ௧௪ கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அண்ணாமலையாரை வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு, 11:59 முதல், நேற்றிரவு, 11:33 மணி வரை நிலவியது. இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால், திருவண்ணாமலை நகர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது.

நேற்று முன்தினம் இரவு, 7:00 முதல், 10:00 மணி வரை மழை பெய்தது. ஆனாலும், மழையில் நனைந்தபடியே பக்தர்கள் பயணித்தனர். அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வசதியாக, தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, நீண்ட வரிசையில் ராஜகோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஐந்து மணி நேரம் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை பக்தர்கள் வழிபட்டனர். இரண்டு நாளில், ௨௦ லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

3 லட்சம் பேர் பயணம்



சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்களில், மூன்று லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement