Advertisement

குலசை., கோவில் உண்டியலில் ரூ. 35 லட்சம் காணிக்கை வசூல்

உடன்குடி;குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவில் உண்டியலில் 35 லட்சத்து 12 ஆயிரத்து 770 ரூபாய் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வசூலானது.

துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 13 நிரந்தர உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி தென்காசி உதவி ஆணையர் கோமதி தலைமையில் நடந்தது.

பக்தர்கள் ரூ.35 லட்சத்து 12ஆயிரத்து 770 ரொக்கமாக செலுத்தியிருந்தனர். தங்கம் 135 கிராம் 200 மி.கி., வெள்ளி 813 கிராம் 600 மி.கி., உண்டியலில் கிடைத்தது.

உண்டியல் எண்ணும் பணியில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், சாத்தான்குளம் ஆய்வாளர் பகவதி, கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரி, தேரியூர் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், பிறைகுடியிருப்பு கல்வியியல் கல்லுாரி மாணவிகள், ஊர் பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement