டிசி மாற்றியதால் மாணவியர் மகிழ்ச்சி
ஓமலுார்:பெரியார் பல்கலை நிர்வாகம், 'திருப்தி' என மாற்றி, 'டிசி' வழங்கியதால், நான்கு மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம், கருப்பூர் பெரியார் பல்கலையில், எம்.ஏ., வரலாற்று துறையில் படித்த போது, நான்கு மாணவியர், அவர்கள் துறை சார்ந்த ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட பல்கலை நடவடிக்கைக்கு எதிராக, கலெக்டர் அலுவலகத்தில் பேட்டியளித்தனர்.
இதனால், அவர்கள் படிப்பு முடிந்ததும், 'டிசி'யின், 'நடத்தை' பகுதியில், 'திருப்தி இல்லை' என குறிப்பிடப்பட்டது.
இதை வாங்க மறுத்து, பெற்றோருடன் மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்துக்கு பின், நேற்று, அந்த நான்கு மாணவியரின் மாற்று சான்றிதழில், 'திருப்தி' என மாற்றி, பல்கலை நிர்வாகம் வழங்கியது.
சேலம், கருப்பூர் பெரியார் பல்கலையில், எம்.ஏ., வரலாற்று துறையில் படித்த போது, நான்கு மாணவியர், அவர்கள் துறை சார்ந்த ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட பல்கலை நடவடிக்கைக்கு எதிராக, கலெக்டர் அலுவலகத்தில் பேட்டியளித்தனர்.
இதனால், அவர்கள் படிப்பு முடிந்ததும், 'டிசி'யின், 'நடத்தை' பகுதியில், 'திருப்தி இல்லை' என குறிப்பிடப்பட்டது.
இதை வாங்க மறுத்து, பெற்றோருடன் மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்துக்கு பின், நேற்று, அந்த நான்கு மாணவியரின் மாற்று சான்றிதழில், 'திருப்தி' என மாற்றி, பல்கலை நிர்வாகம் வழங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!