ADVERTISEMENT
புதுச்சேரி, : புதுச்சேரி ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, மூலக்குளம் , ஜெ.ஜெ.,நகர் பம்ப் ஹவுஸ் அருகில் சந்தேகிக்கும் கஞ்சா பொட்டங்களுடன் நின்றிருந்த 4 பேரை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் புதுச்சேரி மூலக்குளம் அடுத்த லம்பார்ட் சரவணா நகர் நாகமணி மகன் பிரகாஷ்,26; அரியாங்குப்பம் அடுத்த இருசாம்பாளையம் இந்திரா நகர் கார்த்தி மகன் வீரா (எ) பாம் வீரா (எ) செல்வ வீரன்,18; சென்னை மயிலாப்பூர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த மனோகர் மகன் ரஞ்சித், 26; திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் மாரியம்மன் கோவில் தெரு வெங்கடேசன் மகன் விமல்ராஜ், 24; என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து, நான்கு பேரையும் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!