மயங்கி விழுந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறப்பு
காரைக்கால்,: சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காரைக்கால், அம்பகரத்துார் கண்ணாப்பூர் சாலையை சேர்ந்தவர் மதியழகன், 52; கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 31ம் தேதி மாலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சைக்கிளில் புறப்பட்டார். கடைவீதியில் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அம்பகரத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!