Advertisement

தேர்தல் வாகன சோதனை ரூ.5.64 லட்சம் பறிமுதல்

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, 5.64 லட்சம் ரூபாயை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, நேற்று முன்தினம் வரை, 15 பேரிடம், 16 லட்சத்து, 97 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கருங்கல்பாளையம் செக்போஸ்ட் வழியாக, காரில் வந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சீராம்பாளையம் தறிப்பட்டறை உரிமையாளர் சதீஷ்குமாரிடம், 3 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, ஈரோடு, கிருஷ்ணா தியேட்டர் அருகே, மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் நவநீதன் காரில் எடுத்துச்சென்ற, 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

நேற்று காலை, பி.பி.அக்ரஹாரம், கதவணை மின் நிலைய பிரிவு அருகே, ஈரோட்டைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ரித்திக், 64 ஆயிரத்து, 500 ரூபாயை பைக்கில் எடுத்துச் சென்றார். ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் உத்தரவுப்படி, 5.64 லட்சம் ரூபாய் மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement