ADVERTISEMENT
அம்பத்துார், சென்னை ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின், செங்குன்றம் காவல் மாவட்டத்தின், காவல் நிலைய எல்லைகளைச் சேர்ந்த, பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் 12 - 17 வயதுக்குட்பட்ட, நலச்சங்க சிறுவர் - சிறுமியருக்கு, 'சதுரங்க' பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதற்கான பயிற்சி முகாமை, ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய், அம்பத்துார் தொழிற்பேட்டை காவல் நிலைய வளாகத்தில், நேற்று காலை துவக்கி வைத்தார்.
அதில், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தமிழ்செல்வன் பங்கேற்று, நலச்சங்க சிறுவர் - சிறுமியருடன், சதுரங்கம் விளையாடினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!