Advertisement

விபத்தில் இருவர் படுகாயம்

ADVERTISEMENT


ஆவடி, திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி, 58; ஆட்டோ ஓட்டுனர்.

இவர் புதிதாக வாங்கிய 'மாருதி இகோ' கார் டயரில் காற்றடிக்க பிரதான சாலைக்கு கொண்டு சென்றார்.

அப்போது வைஷ்ணவி நகர் அருகே, வலது புறம் திரும்பும் போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, ஆவடி நோக்கி சென்ற ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஆட்டோ ஓட்டி வந்த தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்த மேகவர்ணன், 27, மற்றும் ஆட்டோவில் பயணித்த பச்சையம்மாள், 52,; இருவரும் பலத்த காயங்களுடன் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

அதிர்ஷ்டவசமாக இவர்களுடன் பயணித்த மூதாட்டிக்கு எந்த காயமும் இல்லை. விபத்து குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement