Advertisement

தொழில் உரிமம் புதுப்பிக்க மார்ச் 31ம் தேதி கடைசி



சென்னை, சென்னையில் உள்ள வணிகர்கள், மார்ச் 31க்குள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னையில் பல்வேறு வணிகங்களுக்கு, மாநகராட்சி முனிசிபல் சட்டம் - 1919ன் கீழ், பல பிரிவுகளில் வணிகத்தின் வகைப்பாட்டிற்கு ஏற்றவாறு உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 2023 - 24ம் நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை, வழக்கமாக மாநகராட்சி உரிம ஆய்வாளர்கள் வாயிலாகவும், மண்டல அலுவலகங்களில் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ளவும், அதற்காக நடத்தப்படும் முகாம்களில் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வணிகர்களின் நலன் கருதி, https://chennaicorporation.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், 'க்யூ.ஆர் கோடு' வாயிலாகவும் உரிமங்களை தாமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

எனவே, மார்ச் 31க்குள் வணிகர்கள் தங்களது தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement