சொந்த ஊர் பறந்த தேர்தல் பணி குழுவினர்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கடந்த, 18 ல் அறிவிக்கப்பட்டது. அன்றே தேர்தல் நடத்தை விதிமுறை அமலானது. பொது இடங்களில் சிலைகள், போர்டு, பலகைகள் மறைக்கப்பட்டன. வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டாலும், 20ம் தேதி முதலே மாநகர பகுதியில் பல்வேறு கட்சியினர் வந்து இறங்க துவங்கினர். கடந்த, 21ல் தி.மு.க., கூட்டணி சார்பில் பிரசாரத்தை துவக்கி, அமைச்சர்கள் முத்துசாமி, நேரு வீடுவீடாக ஓட்டு சேகரித்தனர். அடுத்தடுத்த நாளில் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் பணிக்குழுவினர் முழுமையாக வந்திறங்கி, லாட்ஜ்கள், பெரிய காட்டேஜ், தனியார் கட்டடங்கள் என ஈரோடு, பெருந்துறை, பவானி போன்ற இடங்களில் தங்கி, தினமும் நகரை கலக்க துவங்கினர்.
இதனால் தினமும் காலை, 7:00 மணி முதலும் இரவு, 11:00 மணி கடந்தும் சாலைகளில் முழு போக்குவரத்து நெரிசலும், கடைகளில் வியாபாரமும், பிற மாவட்ட நபர்கள், அவர்களது வாகனங்களும் ஆங்காங்கு மணிக்கணக்கில் நிற்பதுமாக காணப்பட்டது. நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைகிறது.
இந்நிலையில் நேற்று ஞாயிறு என்பதால், நேற்று முன்தினம் மாலையே பெரும்பாலான தேர்தல் பணிக்குழுவினர், அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகளும் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் பல நாட்களுக்கு பின், மீனாட்சிசுந்தரனார் சாலை, பெருந்துறை சாலை, மேட்டூர் சாலை, ஈ.வி.என்., சாலை, காந்திஜி சாலை உட்பட பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடின.
இன்று அல்லது நாளை முதல் தேர்தல் பணிக்குழுவினர், அவர்களுடன் வருபவர்கள் தவிர அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்துக்கு வர உள்ளதால், இன்னும் அதிகமாக போக்குவரத்து நெரிசலும், பிரசாரமும் களை கட்டும்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!