சென்னிமலை : சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம், 'கந்தனுக்கு அரோகரா' பக்தி கோஷம் விண்ணதிர, கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.முன்னதாக தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று அதிகாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, 5:40க்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. நிலையை, 5:50 மணிக்கு சுவாமி அடைந்தது.
பின், தேரை மூன்று முறை வலம் வந்து, 6:20 மணிக்கு மூன்று தேர்களில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டனர்.
முதல் தேரில் விநாயக பெருமான், பெரிய தேரில் முருகப்பெருமான் அமிர்தவள்ளி, சுந்தரவள்ளி சமேதராக தங்க கவச அலங்காரத்தில் இடம் பெற்றனர்.
மூன்றாம் தேரில் நடராஜர் சமேதராக எழுந்தருளினார். காலை 6:25 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
தமிழக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.
அப்போது, 'கந்தனுக்கு அரோகரா; முருகனுக்கு அரோகரா' என்று பக்தர்கள் கோஷமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
பல ஊர்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள், காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை 7:05 மணிக்கு தெற்கு ராஜவீதியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இன்று மாலை 5:00 மணிக்கு திருத்தேர் நிலை அடைகிறது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!