வீடு புகுந்து தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்
வேலுார்: வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் சந்தைமேடு பகுதியை சேர்ந்த ஒருவரின் 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அணைக்கட்டு அருகே தீர்த்தம் பகுதியை சேர்ந்த தனியார் பேக்கரி கடையில் பணியாற்றி வரும் தொழிலாளி சந்தோஷ், 22, என்பவர் பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை வழிமறித்து தினமும் காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதனால் மாணவியின் பெற்றோர் நேற்று பேக்கரிக்கு சென்று சந்தோசை தாக்கினர். பின் மாணவிக்கு தொல்லை கொடுப்பது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். ஆத்திரமடைந்த சந்தோஷ் மற்றும் அவரது உறவினர்கள் இன்று மாணவியின் வீட்டுக்கு வந்து அங்கிருந்தவர்களை கட்டையால் தாக்கினர். இதில் மாணவி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இதனால் மாணவியின் பெற்றோர் நேற்று பேக்கரிக்கு சென்று சந்தோசை தாக்கினர். பின் மாணவிக்கு தொல்லை கொடுப்பது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். ஆத்திரமடைந்த சந்தோஷ் மற்றும் அவரது உறவினர்கள் இன்று மாணவியின் வீட்டுக்கு வந்து அங்கிருந்தவர்களை கட்டையால் தாக்கினர். இதில் மாணவி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த சந்தோஷ் மற்றும் வீடு புகுந்த தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்கள் ஒடுக்கத்துார் பஸ் ஸ்டாண்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தீக்குளிக்க முயன்ற மூன்று பெண்களை போலீசார் தடுத்து காப்பாற்றினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!