இரண்டு பெண்களிடம் 8 சவரன் நகை பறிப்பு
கோவை:அரசு பஸ்சில் சென்ற இரு பெண்களிடம், எட்டு சவரன் நகை பறித்த ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.
சுந்தராபுரம், அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி வாணி ஸ்ரீ, சுந்தராபுரம்- உக்கடத்திற்கு, தடம் எண்: 55, அரசு பஸ்சில் சென்றார். பஸ்சை விட்டு இறங்கிய போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்கை செயினை காணவில்லை. மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில், உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சரவணம்பட்டி, சிவானந்தபுரம், பஞ்சர் கடை வீதியை சேர்ந்த ரங்கசாமி மனைவி கண்ணம்மாள்,65, தடம் எண்: 98 ஏ, அரசு பஸ்சில் காளப்பட்டி பிரிவிலிருந்து, எல்.ஜி.பி.நகருக்கு சென்றார். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையை, மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சுந்தராபுரம், அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி வாணி ஸ்ரீ, சுந்தராபுரம்- உக்கடத்திற்கு, தடம் எண்: 55, அரசு பஸ்சில் சென்றார். பஸ்சை விட்டு இறங்கிய போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்கை செயினை காணவில்லை. மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில், உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சரவணம்பட்டி, சிவானந்தபுரம், பஞ்சர் கடை வீதியை சேர்ந்த ரங்கசாமி மனைவி கண்ணம்மாள்,65, தடம் எண்: 98 ஏ, அரசு பஸ்சில் காளப்பட்டி பிரிவிலிருந்து, எல்.ஜி.பி.நகருக்கு சென்றார். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையை, மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!