காங்கிரஸ் காமெடி பீஸ்: குஷ்பு
நாகர்கோவில்:காங்., ஒரு காமெடி பீஸ். அதனால் அந்த கட்சி சொல்வதை யாரும் மதிப்பதில்லை என்று குஷ்பு கூறினார்.
கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்கட்சிகள் இந்துத்துவாவை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்துகிறார்கள். அப்போது தலையில் டர்பன் கட்டுவது பூணுால் கோயில் ஞாபகம் வருகிறது. கோயிலுக்கு போக வேண்டாம் என்று கூறுபவர்களும் தேர்தல் நேரத்தில் கோயிலுக்கு செல்கிறார்கள். கவர்னர் விஷயத்தில் தமிழகத்தில் எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது. தி.மு.க. அரசை மேற்பார்வையிடுவதற்கும் தவறு நடக்கும்போது தட்டிக்கேட்கவும் கவர்னர் இருக்கிறார். சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியே போகும்போது பொன்முடி 'போயா' என கைகாட்டுகிறார். அது பெரிய தவறு.
கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்கட்சிகள் இந்துத்துவாவை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்துகிறார்கள். அப்போது தலையில் டர்பன் கட்டுவது பூணுால் கோயில் ஞாபகம் வருகிறது. கோயிலுக்கு போக வேண்டாம் என்று கூறுபவர்களும் தேர்தல் நேரத்தில் கோயிலுக்கு செல்கிறார்கள். கவர்னர் விஷயத்தில் தமிழகத்தில் எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது. தி.மு.க. அரசை மேற்பார்வையிடுவதற்கும் தவறு நடக்கும்போது தட்டிக்கேட்கவும் கவர்னர் இருக்கிறார். சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியே போகும்போது பொன்முடி 'போயா' என கைகாட்டுகிறார். அது பெரிய தவறு.
இதற்கு முன்பு பெண்கள் பஸ்சில் ஓசியில் போவதாக பொன்முடி சொன்னார். தமிழகம் தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை என காங்., அழகிரி சொல்லியிருக்கிறார். அவருக்கு எதிராக ஏன் கோஷம் போடவில்லை.
காங்., ஒரு காமெடி பீஸ் அதை யாரும் மதிக்கமாட்டார்கள் என்பதால் அதுபற்றி பேசுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!