பொங்கல் சீர்வரிசையுடன் சென்ற கார் கவிழ்ந்து இரு பெண்கள் பலி
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே பொங்கல் சீர் வரிசை கொண்டு சென்று கொண்டிருந்தவர்களின் கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலியாயினர்.
நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். திருநெல்வேலி மார்க்கெட்டில் பணிபுரிகின்றார். மனைவி சுபா. இவர்களது மகள் உமாவை சுசீந்திரத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். திருநெல்வேலி மார்க்கெட்டில் பணிபுரிகின்றார். மனைவி சுபா. இவர்களது மகள் உமாவை சுசீந்திரத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
உமா தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், பொங்கல் சீர்வரிசையை அவரது கணவர் வீட்டில் கொடுக்க முடிவு செய்து பாலசுப்பிரமணியம் -சுபா தம்பதியினர் உறவினர்களை அழைத்துக் கொண்டு காரில் சுசீந்திரத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
பூதப்பாண்டி- தாழக்குடி ரோட்டில் சென்ற போது டிரைவர் சிவசங்கரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணித்த உறவினர்களான உலகம்மாள் 65, உமா 50 , ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் எட்டு பேர் படுகாயமடைந்தனர். பூதப்பாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!