Advertisement

பவானிசாகர் அணை மீண்டும் இன்று திறப்பு

சென்னை:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக நன்செய் பாசனத்திற்கு ஆக. 12 முதல் டிச. 9 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்நிலையில் கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் வழியாக இன்று முதல் டிச. 29 வரை 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று இன்று முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஈரோடு திருப்பூர் கரூர் மாவட்டங்களில் உள்ள 1.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement